கேரளாவில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் துரை ஆனந்த் மற்றும் லியாஸ்ரீ தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
Coimbatore: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டு அரங்கில் கடந்த செப்டம்பர் 4 முதல் 6 வரை நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் துரை ஆனந்த், 60-65 கிலோ ஜூனியர் பிரிவில் (ஸ்டிக் பைட்) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி லியாஸ்ரீ, 40-44 கிலோ சப் ஜூனியர் பிரிவில் (ஸ்டிக் பைட்) தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற இரு மாணவர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சாந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி மற்றும் சேகர் ஆகியோர் பாராட்டினர். மேலும், பள்ளியின் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சாதனை மூலம் கோவை மாநகரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் மேலும் ஒரு மைல்கல் படைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை படைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது.
உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் துரை ஆனந்த், 60-65 கிலோ ஜூனியர் பிரிவில் (ஸ்டிக் பைட்) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், அதே பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி லியாஸ்ரீ, 40-44 கிலோ சப் ஜூனியர் பிரிவில் (ஸ்டிக் பைட்) தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற இரு மாணவர்களையும் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சாந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி மற்றும் சேகர் ஆகியோர் பாராட்டினர். மேலும், பள்ளியின் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சாதனை மூலம் கோவை மாநகரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் மேலும் ஒரு மைல்கல் படைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை படைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது.