மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலைகளை பிடிக்க 24 மணி நேரமாக வனத்துறையினர் முயற்சி

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 24 மணி நேரமாக முதலைகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த பருவமழையின் போது வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை, பட்டக்காரனூர் குட்டையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டபோது, இரண்டு முதலைகள் தண்ணீரில் இருப்பது கண்டறியப்பட்டது.

குட்டையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில், அதனை வெளியேற்றி முதலைகளை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.



நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், இப்பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.

இரவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரங்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டன. முதலைகள் உள்ள பகுதியை சுற்றி நைலான் வலைகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினரின் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் இரவு பகல் பாராமல் முதலைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தற்போது மூன்று அடி அளவிற்கு தண்ணீர் மற்றும் சேறு உள்ள நிலையில், அவற்றை அகற்றிய பின்னர் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...