அன்னூர் அருகே வீட்டில் புகுந்து நகை கொள்ளை: ஒருவர் கைது

கோவை அன்னூர் அருகே கல்ராசிபாளையத்தில் பகல் நேரத்தில் வீட்டில் புகுந்து 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கல்ראசிபாளையம் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கல்ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 13ஆம் தேதி வெளியில் சென்றிருந்தார்.



அப்போது பகல் நேரத்தில் காரில் வந்த இரண்டு நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.



அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த அனைத்து அறைகளையும் சோதனை செய்துள்ளனர்.

வீட்டிற்கு திரும்பிய தங்கவேல், திருட்டு சம்பவம் குறித்து அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.



விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற முனியாண்டியை கைது செய்தனர்.

கைதான நபரிடமிருந்து எட்டு சவரன் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...