கோவை வடக்கு வட்டத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார்; CRPF வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார். யானைகள் நடமாட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை வடக்கு வட்டத்தில் உள்ள CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஒரு வருவாய் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த வட்டத்தின் உள்ளேயே ஏதாவது ஒரு கிராமத்தில் கலெக்டர் தங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 18 அன்று பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை வடக்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அன்று இரவு CRPF வளாகத்தில் தங்கினார். இப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், CRPF வளாகத்திற்கு சுற்றியும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கலெக்டருடன் ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அன்று இரவு தங்கினர். மேலும், மறுநாள் காலை 10 மணி வரை மீண்டும் இப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...