கோவை வடக்கு வட்டத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார்; CRPF வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார். யானைகள் நடமாட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை வடக்கு வட்டத்தில் உள்ள CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஒரு வருவாய் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த வட்டத்தின் உள்ளேயே ஏதாவது ஒரு கிராமத்தில் கலெக்டர் தங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 18 அன்று பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை வடக்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அன்று இரவு CRPF வளாகத்தில் தங்கினார். இப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், CRPF வளாகத்திற்கு சுற்றியும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கலெக்டருடன் ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அன்று இரவு தங்கினர். மேலும், மறுநாள் காலை 10 மணி வரை மீண்டும் இப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...