உக்கடம் அருகே ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் ரூ.40,000 மோசடி

கோவை உக்கடம் அருகே ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி ஒரு வாலிபர் 45 வயது பெண்ணிடம் ரூ.40,000 மோசடி செய்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை உக்கடம் அருகே ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி ஒரு வாலிபர் 45 வயது பெண்ணிடம் ரூ.40,000 மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலுமிச்சம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலனின் மனைவி பியூலா (45) என்பவர் செப்டம்பர் 18 அன்று இரவு உக்கடம் சாலையில் உள்ள ஓட்டல் அருகில் இயங்கும் தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றார். பணம் எடுக்கத் தெரியாத பியூலாவிடம் ஒரு வாலிபர் உதவுவதாகக் கூறி, அவரது நான்கு இலக்க பின் எண்ணை பெற்றுக்கொண்டார்.

அந்த வாலிபர் பியூலாவின் ஏடிஎம் அட்டையை வாங்கி, பணம் எடுப்பது போல் நடித்து, பின்னர் பணம் வரவில்லை என்று கூறி அட்டையை திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில், பியூலாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40,000 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

பின்னர் தெரிய வந்ததில், அந்த வாலிபர் பியூலாவின் அட்டையை மாற்றி வேறொரு அட்டையை கொடுத்துவிட்டு, உக்கடத்தில் உள்ள மற்றொரு ஏடிஎம்மில் பியூலாவின் அட்டையைப் பயன்படுத்தி ரூ.40,000 எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பியூலா உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் ஏடிஎம் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் ஏடிஎம் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும், தங்களது பின் எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...