கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர், கள்ளிமடை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியை (Mass Cleaning) 21.09.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.61-க்குட்பட்ட சிங்காநல்லூர், கள்ளிமடை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (21.09.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், இன்று கிழக்கு மண்டலம் வார்டு எண்.61-க்குட்பட்ட சிங்காநல்லூர், கள்ளிமடை, கிருஷ்ணாபுரம் லே-அவுட், திருச்சி பிரதான சாலை, விநாயகர் கோவில் வீதி, ராஜாவீதி, நடுவீதி, கிழக்கு வீதி ஆகிய பகுதிகளில் சிறப்பு தூய்மைப்பணி நடைபெற்றது.

இந்த சிறப்பு தூய்மைப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியினை தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், மற்றும் களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், நகர்நல அலுவலர் Dr. K. பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் ஆதிமகேஷ்வரி, பாக்கியம், சுமித்ரா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், இன்று கிழக்கு மண்டலம் வார்டு எண்.61-க்குட்பட்ட சிங்காநல்லூர், கள்ளிமடை, கிருஷ்ணாபுரம் லே-அவுட், திருச்சி பிரதான சாலை, விநாயகர் கோவில் வீதி, ராஜாவீதி, நடுவீதி, கிழக்கு வீதி ஆகிய பகுதிகளில் சிறப்பு தூய்மைப்பணி நடைபெற்றது.
இந்த சிறப்பு தூய்மைப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியினை தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல், மற்றும் களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், நகர்நல அலுவலர் Dr. K. பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் ஆதிமகேஷ்வரி, பாக்கியம், சுமித்ரா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.