கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவையில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார்.


Coimbatore: கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பாக 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேலும் அதனை தொடர்ந்து இந்த விழாவில் வின்னர்'ஸ் இண்டியா நிறுவனர் C.K கண்ணன் நான்கு மாணவர்களுக்கு தலா இரண்டு சென்ட் நிலங்களை இலவசமாக வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைவர் பாரி IPS, டாலர் குரூப் ராமமூர்த்தி, கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் நந்தகுமார், இணைச் செயலாளர் லோகநாதன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் அழகேசன், இந்துஸ்தான் கல்விக் குழுமம் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...