கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டை: எஸ்.பி. கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த கஞ்சா வேட்டையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல், 10 குற்றவாளிகள் கைது, 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2,000 குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தீவிர சோதனையின் போது, அனைத்து சந்தேக நபர்களின் இருப்பிடங்களும் சோதனை செய்யப்பட்டன. இதன் விளைவாக, 10 கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



மேலும், மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.



குறிப்பிடத்தக்க மற்றொரு நடவடிக்கையாக, தொண்டாமுத்தூர் பகுதியில் செப்டம்பர் 22 அன்று சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் விற்ற ஒரு பார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த பார் பேரூர் வட்டாட்சியர் மூலம் சீல் வைக்கப்பட்டது. இந்த தொடர் நடவடிக்கைகள் கோவை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...