வால்பாறை சாலைகளில் அலையும் கால்நடைகள்: விபத்து அபாயம் குறித்து நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

வால்பாறை நகர சாலைகளில் அலையும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: வால்பாறை நகர பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் அலைந்து திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் உள்ள சாலைகள் குறுகலானவை. காமராஜர் நகர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த பிரச்சினை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அலைந்து திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலைகளில் மாடுகளை விடுவதை தடுக்கவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...