வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறு: பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது

வால்பாறையில் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை 7 மணி அளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் சுப்பிரமணி கோவில் அருகே திருப்பூர் பகுதியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மகேந்திரா வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே வழியில் வெல்லமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் மற்றும் நடத்துனரை, குடிபோதையில் இருந்த கார் நிறுத்தியவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.



தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாஜக கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் (35), கொங்கு மண்டல நகர் இளைஞர் அணி தலைவர் துரைமுருகன் (36), கொங்கு மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர் வெங்கடேஷ் (25), மண்டல இளைஞர் அணி செயலாளர் அருண் (30), கோதண்டம் (46) மற்றும் மண்டல பொதுச் செயலாளர் சசிக்குமார் (42) ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...