பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமும் நடைபெற்றது.
Coimbatore: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்று நகர அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தேர் நிலை திடல் பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கோஷங்களுடன் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர துணை செயலாளர் தர்மராஜ், நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நகர திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.