மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை உறுதியளித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம் 13வது வார்டு கணேஷ்புரம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தற்பொழுது தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வருகின்றார். இதனால் அவசர தேவைக்காக அவசர ஊர்தி கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மடத்துக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த மே 31 அன்று புகார் மனு வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.



இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை இன்று 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

எனினும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் கிடைக்காதபட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...