ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் 22-வது liveSurge பயிலரங்கம்: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் நடைபெற்றது. ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் இன்று துவங்கியது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கின் முதல் நாளில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் முரளிதரன், கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சேர்மன் டாக்டர் சந்திரசேகர், ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.



இந்த பயிலரங்கில் ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பல்வேறு அமர்வுகளில் இருதய அறுவை சிகிச்சை சம்பந்தமான தகவல்களை காணொளி காட்சிகள் மூலம் விளக்கியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



இருதய அறுவை சிகிச்சை துறையில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்தான தகவல்கள் வழங்கப்பட்டன.



ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், "22-வது liveSurge பயிலரங்கம் கார்டியோதோராசிக் துறையில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த பயிலரங்கம் பங்கேற்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும்" என்றார். மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு 1800 ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.



இந்த பயிலரங்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை ஒன்றினைத்ததோடு, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சை துறையில் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு தயாராகவும் பங்கேற்பாளர்களுக்கு இந்த பயிலரங்கம் பெரிதும் உதவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...