கோவை மாநகராட்சி ஆணையர் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வடக்கு மண்டலத்தில் அவிநாசி சாலை, பீளமேடு, குரும்பர் வீதி பகுதிகளில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இப்பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.



வார்டு எண் 27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பேருந்து நிறுத்தம், வி.கே.சாலை, பொரிக்கடை சந்து, குரும்பர் வீதி 1 & 2, அவிநாசி பிரதான சாலை சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.





இப்பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுதல், தேவையில்லாத பொருட்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல் போன்றவை அடங்கும்.



இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, நாசர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பவுன்ராஜ், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...