கோவை மாநகராட்சி ஆணையர் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வடக்கு மண்டலத்தில் அவிநாசி சாலை, பீளமேடு, குரும்பர் வீதி பகுதிகளில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இப்பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.



வார்டு எண் 27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பேருந்து நிறுத்தம், வி.கே.சாலை, பொரிக்கடை சந்து, குரும்பர் வீதி 1 & 2, அவிநாசி பிரதான சாலை சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.





இப்பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுதல், தேவையில்லாத பொருட்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல் போன்றவை அடங்கும்.



இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, நாசர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பவுன்ராஜ், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...