கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் GKNM மருத்துவமனை மற்றும் LMW நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடத்தியது. இதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் 1 & 3 கி.மீ தொலைவு ஓட்டம், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 கி.மீ ஓட்டம், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. 5 மற்றும் 10 கி.மீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மொத்தம் ரூ.75,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த மாரத்தானில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மூலம், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...