மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் லிங்காபுரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் ஆண்டு BMKC கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை இலுப்பம்பாளையம் கிராமத்தில் BMKC என்ற கபடி குழுவினர் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் பகல் இரவு நடைபெற்ற இந்த கபடி போட்டியில், இறுதிப் போட்டிக்கு சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கபடி அணியும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.கே.சி அணியும் தகுதி பெற்றன.



இறுதிப் போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிங்காபுரம் கபடி அணியினர், ஈரோடு அணியை 46-28 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் பரிசை வென்றனர். முதல் பரிசு பெற்ற லிங்கபுரம் அணிக்கு ரூ.30,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு அணிக்கு ரூ.20,000 ரொக்கமும், அதற்கு இணையான சுழல் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.

மூன்றாம் இடத்தை சேலத்தின் சாமி அகாடமி அணியும், நான்காவது இடத்தை கே.சி.கே கனுவாய் அணியும் பெற்றன. இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...