கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது

அக்டோபர் 27 முதல் கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்குகிறது. கோவை விமான நிலையத்தில் புதிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. கோயம்புத்தூர் நெக்ஸ்ட் அமைப்பின் தலைவர் சதீஷ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கோவையில் இருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கடந்த வாரம் முதல், ஹைதராபாத்துக்கு 26 வாராந்திர சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாழன் மற்றும் சனிக்கிழமை தவிர இண்டிகோவின் தினசரி இயக்கப்படும் 3 விமானங்களுக்கு பதிலாக 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அக்டோபர் 1 முதல் பெங்களூருக்கு 28 வாராந்திர சேவைகளை இண்டிகோ இயக்குகிறது. தினசரி 4 சேவைகள் இருக்கும். மேலும், இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆர் விமானத்துடன் அக்டோபர் 1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவைத் தொடங்குகிறது. அக்டோபர் 27-ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது.

அத்துடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை மாற்றியமைத்துள்ளது. ஆனால் அபுதாபியில் இருந்து விமான அட்டவணை அப்படியே உள்ளது.

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே அக்டோபர் 27 முதல் தினசரி இடைநில்லா விமானங்கள் இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...