14 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியார் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 2010ல் நடந்த மாமியார் கொலை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாமியார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூரில் மறைந்திருந்த குற்றவாளியை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

2010 ஆம் ஆண்டு, மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் வசித்து வந்த ராஜன் (45) என்பவர் குடும்பத் தகராறில் தனது மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் (50) ஆகியோரை அரிவாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பின் ராஜன் தலைமறைவானார்.



இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கைது செய்த மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை சார்பாக டிஎஸ்பி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...