கோவை: மதுக்கரை, சரவணம்பட்டி, செங்கதுரை பகுதிகளில் நாளை மின்தடை

கோவையில் மதுக்கரை, சரவணம்பட்டி, செங்கதுரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்டோபர் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.


கோவை: கோவை மின்வாரியம் சார்பில் இன்று (அக்டோபர் 2) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மதுக்கரை, சரவணம்பட்டி மற்றும் செங்கதுரை துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதுக்கரை துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கே.ஜி.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர். நகர், சுகுணாபுரம், பி.கே. புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

செங்கதுரை துணை மின் நிலையத்தின் கீழ் வரும் செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பகுதி மக்கள் தங்களது அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...