பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மையம் திடீர் மூடல்: பயணிகள் அவதி

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்களும், ரயில்வே நல சங்க நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை, வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது.



இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான வால்பாறை பகுதிக்கும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்த போதும், பயணிகள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. மேலும், தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஒரு முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால், மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று ரயில்வே நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...