கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் லாரியிலிருந்து விழுந்த இரும்பு உருளை: வாகனங்கள் சேதம்

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் லாரியிலிருந்து விழுந்த இரும்பு உருளை கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


Coimbatore: கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியில் இன்று (அக்டோபர் 4) அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. தனியார் நிறுவனத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு மிஷின் மெட்டீரியல் நடுரோட்டில் உருண்டு விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

எல்.அண்ட்.டி நிறுவனத்திலிருந்து லேத் மெஷின் கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு முறைகளை சரியாக பின்பற்றாமல், பெரிய இரும்பு உருளையை இரண்டு பக்கமும் மரக்கட்டைகளால் மட்டுமே கட்டி லாரியில் ஏற்றியிருந்தனர்.

லாரி சென்றபோது, அதிக எடையை தாங்க முடியாமல் இரும்பு உருளை சரிந்து சாலையில் உருண்டு விழுந்தது. இதனால் அருகில் சென்ற கார் மற்றும் இருசக்கர வாகனம் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

சம்பவம் நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள், சாலையில் விழுந்த இரும்பு உருளையை அகற்றி போக்குவரத்தை சீராக்கினர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஓட்டுநர் மற்றும் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கனரக வாகனங்களில் பொருட்களை ஏற்றும்போது பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...