உடுமலை அருகே போலி பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர் சுகுணா, உரிய கல்வித் தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒப்புக்கொண்டார். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புதுப்பாளையம் வீர காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுகுணா என்ற ஓய்வு பெற்ற கிராம சுகாதார செவிலியர், தனது வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அறையில், திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணன் மகாராஜன் முன்னிலையில் சுகுணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், உரிய கல்வித் தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை சுகுணா ஒப்புக் கொண்டார்.



இந்நிலையில், நேற்று குடிமங்கலம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் சுகுணா மீது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், உரிய தகுதி இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...