கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர். சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 4) இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வாகன எண்கள், வாகனத்துக்கான சான்றிதழ்கள், ஹெல்மெட் அணிந்து வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த திடீர் வாகன சோதனையின் போது, ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த திடீர் வாகன சோதனையின் போது, ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.