வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலை 6 மணிக்குப் பின் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலக்குடி - வால்பாறை சாலையில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைக் காண, மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த மாதங்களில் 'கபாலி' என்ற யானை இச்சாலையில் முகாமிட்டு வாகனங்களை விரட்டியது. தற்போது கடந்த சில நாட்களாக 'கணபதி' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி சாலையில் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் வனப்பகுதியை ஒட்டியே சாலை அமைந்துள்ளதால், யானைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாலை 6:00 மணிக்குப் பின் அதிரப்பள்ளி சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் நேற்று (அக்டோபர் 4) அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...