கோவையில் தொடர் தற்கொலை சம்பவங்கள்: கல்லூரி மாணவி மற்றும் இளைஞர் உயிரிழப்பு

கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி சேலையில் தூக்கிட்டும், குனியமுத்தூரில் இளைஞர் மின்விசிறியில் தூக்கிட்டும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி ஒருவரும், குனியமுத்தூரில் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

முதல் சம்பவத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அசோக் குமாரின் மகள் கனகவள்ளி (19), கோவை பி.என்.பாளையம் நேதாஜி நகரில் தனது சகோதரி பிரியதர்ஷினியுடன் தங்கியிருந்து பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அக்டோபர் 4 மாலை, கனகவள்ளி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் (39) மகன் ஹரிஷ் குமார் (19) தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்த ஹரிஷ் குமார், அக்டோபர் 4 இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் வீடு திரும்பிய அர்ச்சனா, மகனின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஹரிஷ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சம்பவங்களிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...