சர்வதேச காராத்தே சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஆஸ்திரியாவில் நடைபெற்ற 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு சரவணம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கோஜுரியோ கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவை வீரர்கள், ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரியாவில் நடந்த 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 26 நாடுகளில் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய அணி சார்பில் கோவையைச் சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே, குழு என வயது மற்றும் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த கைலாஷ், சுனில், நந்தகுமார், ஆகாஷ், மஹா கவுரி ஆகிய ஐந்து பேரும் தலா ஒரு வெண்கலப் பதக்கமும், தார்ணீஷ் என்ற மாணவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் கராத்தே சாம்பியன்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏசியன் கராத்தே அகாடமி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பகுதி செயலாளர் சிரவை சிவா, பார்த்திபன், பாஸ்கரன், சென்செய் ஆர்.முத்துராஜு, ஹென்றி சுரேஷ், சென்செய் பிரமோஷ், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேல், ஷிஹான் டி.முத்தையா, சுகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...