காரமடை அருந்ததியர் மடத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அருந்ததியர் மடத்தை தனியார் அறக்கட்டளை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை மீட்டு அருந்ததியர் சமூகத்தினருக்கு வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை நகராட்சியில் உள்ள அருந்ததியர் சமூகத்திற்கு சொந்தமான பொதுமக்கள் சமுதாய மண்டபத்தை (மடம்) மீட்டு, அருந்ததியர் சமூக மக்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரி, காரமடை அருந்ததியர் மடம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களின்படி, இந்த மடம் தற்போது அருந்ததியர் சமூக மக்களின் பயன்பாட்டில் இல்லை. துரைசாமி என்பவர் மடத்தின் சொத்தை 'ஸ்ரீ அருந்ததி பொதுநல அறக்கட்டளை' என்ற பெயரில் நடராஜன் என்பவருக்கு மாற்றி விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



காரமடையில் அனைத்து சமூக மக்களுக்கும் தனித்தனியாக மடங்கள் உள்ளன. இந்த மடங்கள் அந்தந்த சமூக மக்களின் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அருந்ததியர் மடம் மட்டும் அருந்ததியர் சமூக மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் தனி ஒரு நபரின் கைவசம் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அருந்ததியர் சமூகத்திற்கு சொந்தமான இந்த சொத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மடத்தை மீட்டு மீண்டும் அருந்ததியர் சமூக மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...