நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

திருமலையம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் ரமேஷ்குமார், நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பள்ளி விதிமீறல்கள் மற்றும் வரி செலுத்தாமை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: திருமலையம்பாளையம் பேரூராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் ரமேஷ்குமார், நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேரு காலேஜ் ஆப் எஜுகேஷன் & சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வரும் நேரு ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆகிய தனியார் சுயநிதி கல்லூரிகள் 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

இதே கல்வி குழுமம் நேரு இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2016-17இல் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விதிகளை மீறி கூடுதலாக கட்டிடங்களை அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக சுயநிதி பள்ளியை நடத்தி வருகிறது.

இந்த தனியார் சுயநிதி பள்ளிக்கு கடந்த 7 ஆண்டுகளாக சொத்துவரி விதிப்பு செய்யாமலும் வரி செலுத்தாமலும் உள்ள நிலையில், தற்போது இப்பள்ளிக்கு மூன்றாம்தளம் மற்றும் நான்காம் தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் இணைய வழி ஒப்புதல் வழங்கியிருப்பது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு மற்றும் விதிமீறல் ஆகும்.

எனவே, விதிகளை மீறி கட்டிடங்களை அமைத்துள்ள மேற்படி தனியார் சுயநிதி பள்ளியை ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தி, 7 ஆண்டுகளுக்கான உரிய சொத்து வரியை செலுத்தும் வரை மூன்றாம்தளம் மற்றும் நான்காம்தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய இணைய வழி ஒப்புதலை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ்குமார் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...