நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

திருமலையம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் ரமேஷ்குமார், நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பள்ளி விதிமீறல்கள் மற்றும் வரி செலுத்தாமை குறித்து புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: திருமலையம்பாளையம் பேரூராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் ரமேஷ்குமார், நேரு இன்டர்நேஷனல் பள்ளிக்கு கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய கட்டிட அனுமதியை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேரு காலேஜ் ஆப் எஜுகேஷன் & சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தி வரும் நேரு ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் மற்றும் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆகிய தனியார் சுயநிதி கல்லூரிகள் 3 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

இதே கல்வி குழுமம் நேரு இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில், திருமலையம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2016-17இல் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விதிகளை மீறி கூடுதலாக கட்டிடங்களை அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக சுயநிதி பள்ளியை நடத்தி வருகிறது.

இந்த தனியார் சுயநிதி பள்ளிக்கு கடந்த 7 ஆண்டுகளாக சொத்துவரி விதிப்பு செய்யாமலும் வரி செலுத்தாமலும் உள்ள நிலையில், தற்போது இப்பள்ளிக்கு மூன்றாம்தளம் மற்றும் நான்காம் தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் இணைய வழி ஒப்புதல் வழங்கியிருப்பது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு மற்றும் விதிமீறல் ஆகும்.

எனவே, விதிகளை மீறி கட்டிடங்களை அமைத்துள்ள மேற்படி தனியார் சுயநிதி பள்ளியை ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தி, 7 ஆண்டுகளுக்கான உரிய சொத்து வரியை செலுத்தும் வரை மூன்றாம்தளம் மற்றும் நான்காம்தளம் அமைக்க கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய இணைய வழி ஒப்புதலை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ்குமார் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...