திருப்பூர் வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி; பொதுமக்களும் கைகொடுப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்குமிடம், உணவு வழங்கி உதவி. பொதுமக்களும் தன்னார்வமாக உதவி கரம் நீட்டினர்.


Coimbatore: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி உதவிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் தன்னார்வமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் கார்த்தி என்பவரின் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்த குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரித்துராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்டவர்களை பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...