கோவை-நாகர்கோவில் இரயில் பாதையில் தற்காலிக மாற்றம்: தெற்கு இரயில்வே அறிவிப்பு

கோவை-நாகர்கோவில் இரயில் அக்டோபர் 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளே இதற்கு காரணம்.


கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பாதையில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் இன்ஜினியரிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் அக்டோபர் 10 முதல் கோவை-நாகர்கோவில் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய வழித்தடத்தின்படி, கோவை-நாகர்கோவில் ரயில் (எண்: 16321) விருதுநகர், கரூர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக செல்லும். இந்த மாற்றம் அக்டோபர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மட்டுமே அமலில் இருக்கும்.

இந்த வழித்தட மாற்றம் தற்காலிகமானது என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...