ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 83 லட்சத்திற்கும் மேல் காணிக்கை: தங்கம், வெள்ளியும் கிடைத்தது

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 அன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம் ரூ.83,70,893, 178 கிராம் தங்கம், 304 கிராம் வெள்ளி கிடைத்தது. அறங்காவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: ஆனைமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

காணிக்கை எண்ணும் பணியில் சலவநாயக்கன்பட்டி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.23,24,376 மற்றும் நிரந்தர உண்டியலில் ரூ.60,46,517 என மொத்தம் ரூ.83,70,893 கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 178 கிராம் தங்கமும், 304 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, பொள்ளாச்சி ஆய்வர் பாக்கியவதி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த காணிக்கை தொகை கோவிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...