உடுமலை அருகே அரசு பேருந்து மோதி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் குரு பிரசாத் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பலன் இல்லாமல் போனது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலை அருகே உள்ள தாந்தோனி பகுதியில் தாராபுரம் சாலையில் இருந்து உடுமலையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், உடுமலையில் இருந்து தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் குரு பிரசாத் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.



எதிர்பாராத விதமாக அரசு பேருந்து குரு பிரசாத்தின் இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் குரு பிரசாத் சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரு பிரசாத் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பேருந்து மோதிய வேகத்தில் ஹெல்மெட் உடைந்து போனதால் அவரால் உயிர் தப்ப முடியவில்லை.

உடுமலை அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த குரு பிரசாத்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...