தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அவரது தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததாக குறிப்பிட்டார்.
Coimbatore: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா அவர்களின் மறைவு மிகவும் வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியதாக முதல்வர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி, புதுமை, மனிதநேயச் செயல்பாடுகளில் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பு கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை பதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டதாகவும், எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ரத்தன் டாடா அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியதாக முதல்வர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி, புதுமை, மனிதநேயச் செயல்பாடுகளில் ரத்தன் டாடா காட்டிய இடையறாத அர்ப்பணிப்பு கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை பதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டதாகவும், எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ரத்தன் டாடா அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.