கோவை திரு.வி.க நகரில் சாலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோவை உருமாண்டம்பாளையம் திரு.வி.க நகரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் 14-வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை.



கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. நேற்று இரவு, இப்பகுதியை சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக 14-வது வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ் தலைமையில் வெள்ளக்கிணறு முதல் கணபதி வரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 14-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா தங்கவேலு, உதவி பொறியாளர் உத்தமன், துடியலூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வேலைகள் செய்து சாலையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...