கோவை மாவட்டம் காரமடை அருகே வெண்மணி நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு நடந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரு நபர்களை கைது செய்து திருடப்பட்ட லேப்டாப்பை மீட்டனர்.
Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அருகே வெண்மணி நகரில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் லேப்டாப் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெண்மணி நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய பாடசாலையின் பொறுப்பாளராக முகமது நிவாஸ் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டாம் தேதி பாடசாலையை மூடிவிட்டு சென்ற அவர், மறுநாள் காலை திரும்பி வந்தபோது, பாடசாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலையுயர்ந்த லேப்டாப் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.
உடனடியாக முகமது நிவாஸ் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பாடசாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஊட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோவை மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெண்மணி நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய பாடசாலையின் பொறுப்பாளராக முகமது நிவாஸ் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டாம் தேதி பாடசாலையை மூடிவிட்டு சென்ற அவர், மறுநாள் காலை திரும்பி வந்தபோது, பாடசாலையின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலையுயர்ந்த லேப்டாப் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.
உடனடியாக முகமது நிவாஸ் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பாடசாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஊட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கோவை மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.