பொள்ளாச்சியில் போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் திடீர் சோதனை

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. குட்கா, போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பான் மசாலா, குட்கா, போதை வஸ்துக்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறையில், கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்றும், காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார்களா என்றும் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோப்புகளை ஆய்வு செய்தார்.



பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுகின்றனவா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடை உரிமையாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

நகராட்சி பகுதியில் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா, அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பதை போலீசார் சரிபார்த்தனர். ஏடிசி தியேட்டர் பகுதியில் கடைகளின் முன்பு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த திடீர் சோதனையில் காவல் ஆய்வாளர்கள் ரத்தினகுமார், ராஜேஸ்வரி மற்றும் பல உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆய்வு பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...