கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினரால் நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டது. இயற்கை விவசாய பொருட்கள், நெகிழி இல்லாத சூழலில் விற்பனை செய்யப்பட்டன.
Coimbatore: கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினர் சார்பில் "நம்ம ஊரு சந்தை" என்ற பெயரில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெற்றது. இந்த சந்தை பல்வேறு பகுதிகளில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.
அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள், நாட்டுச்சக்கரை, கடலை உருண்டை, கம்பு உருண்டை உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.

மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன், மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் கவர்களில் பொருட்கள் கட்டித் தரப்படுகின்றன. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.
அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள், நாட்டுச்சக்கரை, கடலை உருண்டை, கம்பு உருண்டை உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.
மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன், மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் கவர்களில் பொருட்கள் கட்டித் தரப்படுகின்றன. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.