கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து இந்த வகுப்புகளை நடத்த உள்ளது.



இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இப்பள்ளிக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களின் போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்," என்று தெரிவித்தார்.

மேலும், மழை நீர் வடிகால் பணிகள் குறித்தும் அவர் பேசினார். "கோவை மாநகராட்சியில் அவிநாசி மேம்பாலம், காளீஸ்வரர் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் தான் அதிகளவு மழை நீர் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நீரை வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளோம். இனி மழைநீர் தேங்காத வண்ணம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

ஆவாரம்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கான உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். மேலும், அவர்கள் இழந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"கோவை மாநகராட்சி முழுவதும் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதியளித்தார்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...