கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து இந்த வகுப்புகளை நடத்த உள்ளது.



இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இப்பள்ளிக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களின் போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்," என்று தெரிவித்தார்.

மேலும், மழை நீர் வடிகால் பணிகள் குறித்தும் அவர் பேசினார். "கோவை மாநகராட்சியில் அவிநாசி மேம்பாலம், காளீஸ்வரர் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் தான் அதிகளவு மழை நீர் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நீரை வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளோம். இனி மழைநீர் தேங்காத வண்ணம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

ஆவாரம்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கான உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். மேலும், அவர்கள் இழந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"கோவை மாநகராட்சி முழுவதும் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதியளித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...