பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தலின் பேரில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. வரும் 29ம் தேதி தேரோட்ட விழா திட்டமிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் 29ம் தேதி நடைபெற உள்ள தேரோட்ட விழாவை முன்னிட்டு, தேரின் உறுதித்தன்மையை கண்டறிய இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.






கடந்த 23ம் தேதி துவங்கிய இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29ம் தேதி தேரோட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேரை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரின் உறுதித்தன்மையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து நிலைத்தன்மை சான்றிதழ் வழங்க மறுத்தனர்.




இதனால், சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தினர்.




பொதுப்பணித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. நேற்று இரவு பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். இன்று காலை மீண்டும் ஆய்வு செய்து இறுதி முடிவை தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.




அப்போது அங்கிருந்த ஹிந்து அமைப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர். "தேரோட்டம் நிச்சயம் நடக்க வேண்டும். தேரின் உறுதித்தன்மையை கண்டறிய இன்று சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதன்மூலம் தேர் உறுதியாக உள்ளதா என்பது தெரியும்" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




இதையடுத்து, தேரின் உறுதித்தன்மையை கண்டறிய இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். சோதனை ஓட்டத்தின் முடிவுகளை அடுத்து தேரோட்ட விழா நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...