கோவையில் அவசர கால கட்டுபாட்டு உதவி மையம்: மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்கள்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுபாட்டு உதவி மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுபாட்டு உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது, குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2. கனமழையின் போது ரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் போது அப்பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. மழையினால் வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் விழும் நிலையில் இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

4. மழைக்காலத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குடிநீரை சூடுபடுத்தி குடிக்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...