மேட்டுப்பாளையம் நகராட்சியில் மழைக்கால மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் பணியாளர்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நகராட்சி தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைக்கால மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஏற்கனவே அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள தேவையான மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி இன்று (அக்டோபர் 15) நேரில் பார்வையிட்டார். இதன்போது, மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நகராட்சி தலைவர் உத்தரவிட்டார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...