கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்புகளுக்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா மார்ச் 25, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.








தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. ரவி மற்றும் கலை, அறிவியல் பீட டீன் திருமதி ராகவி ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.








இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Rotary International மாவட்டம் 3026-ன் மாவட்டத் தலைவர் Rtn. PP. Hendry Amalaraj கலந்து கொண்டார். மேலும் கௌரவ விருந்தினராக ஓம் சக்தி ராஜா ராஜேஸ்வரி ஆலயம், கோவையின் முன்னாள் செயலாளர் P. Duraisamay பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.








தமிழ் பண்பாடு மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...