வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு நாட்களில் தன் மீது 110 வழக்குகள் சுமத்த முயற்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


Coimbatore: இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து, அதற்கான வேட்புமனுவை கடந்த புதன்கிழமை (02.04.2026) அன்று பேரூர் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.






இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த இரண்டு நாட்களிலேயே காவல் துறையினர் உள்நோக்கத்துடன் அவர் மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி, தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அவர் புகார் மனு அனுப்பியுள்ளார்.






வேட்புமனு தாக்கல் செய்த இரண்டே நாட்களில், சில காவல்துறையினரின் தூண்டுதலின் பேரில் சுமார் 110 வழக்கு தன் மீது சுமத்த முயற்சிப்பதாக K. Surya தெரிவித்துள்ளார். மக்கள் செல்வாக்கு இருப்பதை அறிந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கிலும், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயல் திட்டமிட்டு செய்யப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.






ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில், தன்னை மட்டும் குறிவைத்து இத்தனை வழக்குகளைப் போட முயற்சிப்பது ஒரு மனித உரிமை மீறல் என அவர் சாடியுள்ளார். குறிப்பாக கோவை மாநகர செல்வபுரம் காவல் நிலையக் காவல்துறையினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.






இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி IAS, சென்னை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் IAS மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு அவர் அவசரப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.






தன் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...