தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறு வரையறை என்ற பெயரில் மத்திய அரசு சதி செயலில் ஈடுபடுகிறது என்றும் அதற்கு துணைபோகும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் கண்டித்து, தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் மற்றும் இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தொகுதி மறு வரையறை செய்வதற்கான சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக கண்டித்தனர்.



கருப்பு கொடிகளை ஏந்தியும், கருப்பு சட்டைகளை அணிந்தும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொகுதி மறு வரையறை சட்ட மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.





இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும், நகல் எரிப்பு போராட்டத்திற்கும் தாராபுரம் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, கோனப்பன் சாலை செந்தில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...