கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தினார். மாவட்ட அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.


தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவையில் இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

முன்னதாக, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள விளையாட்டு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், துறையின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.



கூட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்ற நிலையை அமைச்சர் ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதையடுத்து, திட்டங்கள் விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்றப்படுவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கிய அமைச்சர், பணிகளை காலக்கெடுவிற்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மாவட்ட வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...