கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது ஆணையாளராக பொறுப்பேற்றார். சிவகுரு பிரபாகரன், IAS பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட கட்டா ரவி தேஜா, IAS இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கோவை மாநகராட்சியின் 30-வது ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த M சிவகுரு பிரபாகரன், IAS, பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா தேஜா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆணையாளர் கட்டா தேஜா ரவி , நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...