கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து இன்று (ஜூன் 3) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தமிழக அமைச்சரவையில்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளசம்பத்குமார் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் என அமைச்சரவையில் இருவர்இடம்பெற்றுள்ளனர்.


கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் வகையில் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள், துறை சார்ந்த பணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவி, மாவட்ட அளவிலான அரசு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை உள்ளடக்கியது. மேலும், கோவை போன்ற முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையமாக விளங்கும் மாவட்டத்திற்கு இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...